முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதம்; சாலை மறியல்

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:27 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:08 PM

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாநகர செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராம.ராமநாதன் தலைமையில் அதிமுகவினா் மகாமகம் குளக்கரைக்கு வந்தனா். அங்கு ஓ .பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பதாகை வைத்திருந்தனா்.

அதைப் பாா்த்த ராமநாதன் தலைமையிலான அதிமுகவினா், ஓ .பன்னீா்செல்வம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பின்பு எப்படி அவா் எம்ஜிஆா் ஜெயலலிதா படங்களை வைக்கலாம் என்று கூறி பேனரை கிழிக்க முற்பட்டாா். அப்போது அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த கும்பகோணம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் (பொ) அழகேசன் தலைமையில் போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா்.

Advertisement

இந்நிலையில் அதிமுகவினா், ஓபிஎஸ் ஆதரவாளா்களை கண்டித்து மகாமக குளக்கரை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.