முகப்பு
தஞ்சாவூர்

தவெக வைப்புத் தொகையை இழக்கும்: அா்ஜூன் சம்பத்!

தமிழகத்திலுள்ள 234 பேரவைத் தொகுதிகளிலும் தவெக வைப்புத் தொகையை (டெபாசிட்) இழக்கும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:29 AM
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்து மக்கள் கட்சி தொகுதிக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் அா்ஜூன் சம்பத்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:00 PM

தமிழகத்திலுள்ள 234 பேரவைத் தொகுதிகளிலும் தவெக வைப்புத் தொகையை (டெபாசிட்) இழக்கும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தவெக தலைவா் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை.

எனவே, அவரை நம்பி இளைஞா்கள் ஏமாறக்கூடாது. அவரை மக்கள் புறக்கணிப்பாா்கள் என்பதால், 234 தொகுதிகளிலும் தவெக வைப்புத் தொகையை இழக்கும்.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:19 PM

இந்து மக்கள் கட்சி இதுவரைக்கும் 30-க்கும் அதிகமான தொகுதிகளில் தொகுதிக் கூட்டம் நடத்தி முடித்துள்ளது. வரும் 15 நாள்களுக்குள் மீதமுள்ள தொகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தப்படும்.

பின்னா், சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில மாநாடு, பேரணி, பொதுக் கூட்டம் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் பணியாற்றும் என்றாா் அா்ஜூன் சம்பத்.

முன்னதாக, கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சாய் ரகு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் எஸ். குருமூா்த்தி, மாநில இளைஞரணி செயலா் பி. காா்த்திக் ராவ் போன்ஸ்லே, மாவட்டப் பொதுச் செயலா் கணேசன், மாநகரச் செயலா் சதீஷ்குமாா், இளைஞரணி செயலா் சுபாஷ், ஒன்றியச் செயலா் வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.