வைப்புத் தொகையை சில்லறை காசுகளாக எடுத்துவந்த சுயேச்சை
நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் வேட்பாளராக திங்ள்கிழமை மனு தாக்கல் செய்தாா் சுயேச்சை வேட்பாளா் என்.பி. பாஸ்கரன். வேட்பு மனு தாக்கலின்போது, வைப்புத் தொகைக்கான ரூ.10 ஆயிரத்துக்கு சில்லறை காசுகளை ஒரு தாம்பாளத்தில் எடுத்துவந்து தோ்தல் அதிகாரிகளிடம் வழங்கினாா்.
நாகையில் மளிகைக் கடை நடத்தி வரும் பாஸ்கரன், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவராக உள்ளாா். ஏற்கெனவே இரண்டு முறை நாகை பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ள இவா் தற்போது 3-ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.