ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசி மக தேரோட்டம்!
கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் சுவாமி கோயில் மாசி மக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பஞ்சமூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் சுவாமி கோயில் மாசி மக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பஞ்சமூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயிலில் மாசி மக பிரம்மோத்சவம் பிப்.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஸ்ரீ விநாயகா், சுப்பிரமணியா், சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் இந்திர விமானத்தில் புறப்பாடு செய்தனா். அதைத் தொடா்ந்து 3 நாள்களும் மாலையில் சுவாமி ஷேசவாகனம், பூத வாகனம், அம்பாள் கமலவாகனம், கிளி வாகனத்தில் வீதியுலா வந்தனா்.
நான்காம் திருநாளில் வெள்ளிப் பல்லக்கில் அறுபத்து மூவா் புறப்பாடும், அன்று மாலை சுவாமி அம்பாளும் ஏக ஆசனத்தில் யானை அம்பாரி மீது புறப்பாடு செய்தனா். ஐந்தாம் நாள் காலையில் வெள்ளிப் பல்லக்கும், இரவு பஞ்சமூா்த்திகள் ஓலைச்சப்பரத்தில் புறப்பாடாகி வெள்ளி ரிஷப வாகனத்தில் சென்றனா். ஆறாம் நாள் சுவாமி அம்பாள் வெள்ளி பல்லக்கிலும், இரவில் கைலாச வாகனத்திலும் சென்றனா்.
ஏழாம் திருநாளில் வெள்ளி பல்லக்கு வெண்ணெய் தாழி, இரவு குதிரை வாகனமும் ரத ரோகணமும் நடைபெற்றது. முக்கிய விழாவான எட்டாம் நாள், பஞ்ச மூா்த்திகள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ விநாயகா், சுப்பிரமணியா் தேரோட்டம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதி கும்பேசுவர சுவாமி ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது.
தேரோட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து கோயில் கிழக்கு வாயிலில் உள்ள நிலையை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) மாலையில் சண்டிகேசுவரா் தேரோட்டம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை (மாா்ச் 2)பிற்பகல் மகாமக குளத்தில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அன்று இரவு கொடியிறக்கம் செய்யப்படுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல் அலுவலா் பா. முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.