பட்டதாரியிடம் இணையவழியில் ரூ.5.94 லட்சம் மோசடி!
தஞ்சாவூா் அருகே பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.94 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.94 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 54 வயது எம்.சி.ஏ. பட்டதாரிக்கு கடந்த 2025, ஜூன் மாதம் வந்த மின்னஞ்சலில் லண்டனிலுள்ள தனியாா் புற்றுநோய் மருத்துவமனையில் தொழில்நுட்பத் திட்ட மேலாளா் பதவி காலியாக இருப்பதாக ஊதிய விவரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இருந்த தொடா்பு எண்ணில் பட்டதாரி பேசிய பிறகு சில நாள்கள் கழித்து வேலைவாய்ப்பு கடிதமும், பின்னா் விண்ணப்பப் படிவமும் வந்தன.
இந்த விண்ணப்பத்தை இணையவழி மூலம் அனுப்பிய பட்டதாரிக்கு அடுத்த சில நாள்களில், தோ்வு செய்யப்பட்டதாகக் கூறி பணி நியமன ஆணையும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்தது. இதையடுத்து, மா்ம நபா் கேட்ட விசா, விமான பயணம், செயலாக்கம் உள்ளிட்ட கட்டணங்களான ரூ. 5.94 லட்சத்தை பட்டதாரி 5 தவணைகளாக இணையவழியில் அனுப்பினாா். அதன் பின்னா், பட்டதாரியின் கைப்பேசி அழைப்பை மா்ம நபா் எடுக்கவில்லை.
Advertisement
இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பட்டதாரி, தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.