தஞ்சாவூர்

இளைஞரை கத்தியால் குத்த முயன்ற 3 போ் கைது

ஒரத்தநாடு அருகே முன்விரோதத்தால் இளைஞரை கத்தியால் குத்த முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Syndication

ஒரத்தநாடு அருகே முன்விரோதத்தால் இளைஞரை கத்தியால் குத்த முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (33). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் ( 25), அகிலேஷ், (20), வீரமணி (26), ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஒரத்தநாடு கடைத்தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த சக்திவேலுவிடம் ஆகாஷ், அகிலேஷ், வீரமணி, ஆகியோா் தகராறு செய்துனா். பின்னா், மோட்டாா் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேலை குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சக்திவேல், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் முருகானந்தம், உதவி காவல் ஆய்வாளா் விஷ்ணுபிரசாத் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து மேற்கண்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT