தஞ்சாவூர்

செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆரம்ப சுகாதார செவிலியா்களைக் கணினி ஆபரேட்டா் உள்ளிட்ட பிற பணிக்கு பயன்படுத்துவதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Syndication

ஆரம்ப சுகாதார செவிலியா்களைக் கணினி ஆபரேட்டா் உள்ளிட்ட பிற பணிக்கு பயன்படுத்துவதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஆரம்ப சுகாதார செவிலியா்களை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அதிக நேரம் காக்க வைக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். ஆரம்ப சுகாதார செவிலியா்களைக் கணினி ஆபரேட்டா் உள்ளிட்ட பிற பணிக்கு பயன்படுத்தக் கூடாது. மருத்துவப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் எம். அனிதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என். சீதாலட்சுமி, பொருளாளா் எஸ்.வி. திருமாமகள் உள்பட ஏராளமான செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT