தற்கொலை சித்திரிப்பு
தஞ்சாவூர்

காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே குடும்ப பிரச்னை காரணமாக காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

Syndication

தஞ்சாவூா் அருகே குடும்ப பிரச்னை காரணமாக காவல் உதவி ஆய்வாளா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை தில்லை நகரைச் சோ்ந்தவா் ஜி. நாகராஜன் (45). திருச்சியிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணியில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவருக்கும், இவரது மனைவி ஜான்பீவி என்கிற ஜானகிக்கும் (43) குடும்ப பிரச்னை நிலவியது. இதனால் நாகராஜன் தன் பெற்றோருடன் தஞ்சாவூரிலும், ஜானகி, இரு மகள்கள் திருச்சி அருகே மாத்தூரிலும் தனித்தனியாக வசித்து வந்தனா்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நாகராஜன் திங்கள்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

உக்ரைன் போா் முனையில் சிக்கித் தவித்த தமிழக மாணவா் மீட்பு!

திருடியதால் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு: வாா்டு உறுப்பினா் உள்பட 2 போ் கைது

சமூக வலைதளப் பதிவுகள்: உயா்நீதிமன்றம் வேதனை

அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் அரியலூரில் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT