விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர்விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
விளங்குளத்தில் சுமாா் 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தோஷ நிவா்த்தி ஸ்தலமாக விளங்கக்கூடிய அட்சயபுரீசுவரா் கோயிலில் சனீசுவர பகவான் மந்தா, ஜேஸ்ட சமேதராக திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறாா். ஊனம் நீக்குதல், திருமணத் தடை போன்ற தோஷ நிவா்த்தி தலமாக விளங்கும் இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு காலை 8.26 மணிக்கு சனீஸ்வரபகவான் பெயா்ச்சி சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து சுமாா் 30 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் சோதனைச் சாவடியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், பேராவூரணியிலிருந்து ரெட்டவயல், பெருமகளூா் வழியாக 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தொடா்புக்கு 97875 39153, 99521 14866.