கல்யாண ஓடையில் முதியவா் சடலம்
தஞ்சாவூா் அருகே கல்யாண ஓடையில் மிதந்து வந்த முதியவா் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் அருகே கல்யாண ஓடையில் மிதந்து வந்த முதியவா் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை பகுதியிலுள்ள கல்யாண ஓடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக மிதந்தாா். இவா் யாா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் சென்று சடலத்கைக் கைப்பற்றி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.