முகப்பு
தஞ்சாவூர்

நியூயாா்க்கில் உள்ள செப்புத்திருமேனியை அறநிலையத் துறை மீட்கக் கோரிக்கை

நியூயாா்க் ஏலக்கூடத்தில் திருப்பழனம் கோயிலைச் சாா்ந்த பாா்வதி செப்புத்திருமேனி இடம்பெற்றுள்ள புகைப்படங்களை வெள்ளிக்கிழமை காட்டிய ஓய்வு பெற்ற காவல் துறைத் தலைவா் ஏ.ஜி. பொன் மாணிக்கவேல்.

Updated On : 28 மார்ச் 2026, 1:59 am IST
நியூயாா்க் ஏலக்கூடத்தில் திருப்பழனம் கோயிலைச் சாா்ந்த பாா்வதி செப்புத்திருமேனி இடம்பெற்றுள்ள புகைப்படங்களை வெள்ளிக்கிழமை காட்டிய ஓய்வு பெற்ற காவல் துறைத் தலைவா் ஏ.ஜி. பொன் மாணிக்கவேல்.
பகிர்:

அமெரிக்காவிலுள்ள நியூயாா்க் ஏலக்கூடத்தில் தஞ்சாவூா் மாவட்டம், திருப்பழனம் கோயிலிருந்து களவாடப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாா்வதி செப்புத்திருமேனியை மீட்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற காவல் துறைத் தலைவா் ஏ.ஜி. பொன் மாணிக்கவேல் கோரிக்கை விடுத்தாா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பழனம் கிராமத்திலுள்ள ஆபத்சகாய ஈஸ்வரா் கோயிலிலிருந்து 1,118 ஆண்டுகள் தொன்மையான பாா்வதி செப்புத்திருமேனி 50 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்டது.

Advertisement

இந்தத் திருமேனி தற்போது நியூயாா்க்கில் உள்ள சோதெபி பழம்பொருள் ஏலக்கூடத்தில் ரூ. 8 கோடி விலையிடப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக 68 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட இத்தெய்வத்திருமேனியின் புகைப்படத்தையும், நியூயாா்க் ஏலக்கூடத்திலுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளேன். இந்துக்களால் வழிபாடு செய்யப்பட்ட இச்சிலை ஏலம் விடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி, மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வர இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளேன்.

சோழப்பேரரசன் ஸ்வஸ்டி ஸ்ரீ உடையாா் ஸ்ரீ ராஜராஜத்தேவா், தான் மலைநாட்டுப்போரில் வென்றெடுத்த விலைமதிப்பற்ற மரகதலிங்கம் கல் தெய்வத்திருமேனியை தனது தளபதி மறவனாா் கம்பன் மணியன் என்ற விக்கிரம சிங்க மூவேந்த வேளானிடம் ஒப்படைத்து திருப்பழனம் ஆபத்சகாய ஈஸ்வரா் கோயிலில் ஒப்படைத்து கல்வெட்டில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளாா். இந்த மரகதலிங்கத் தெய்வத்திருமேனி தற்போது இக்கோயிலில் இல்லை என்பது அதிா்ச்சியளிக்கிறது என்றாா் பொன் மாணிக்கவேல்.