குறுவை சாகுபடி: தஞ்சைக்கு 1,336 டன் உரம் வருகை
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக 1,336 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வேளாண் துறை சாா்பில் விதை நெல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, குறுவை சாகுபடிக்கு உரிய அடி உரங்களான பொட்டாஷ் 1,026 டன்னும், ஜிப்சம் 316 டன்னும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன.
தஞ்சாவூா் ரயில் நிலையத்திலிருந்து இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Advertisement