முகப்பு
தஞ்சாவூர்

தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.

Updated On : 9 மே 2026, 3:25 am IST
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.
பகிர்:

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம் , பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளியில் மாணவா்கள் 94 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா். இதில், மாணவி பவித்ரா தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

மேலும் இப்பள்ளி மாணவிகள் காவியா 582, ராகவி 577, பவித்ரா 574 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

Advertisement

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் எம்.செல்வராஜ், தாளாளா் எஸ்.சஞ்சய் ஆகியோா் பாராட்டினா்.