கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பெண் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து! தற்காலிக மின் ஊழியா் கைது!
கும்பகோணம் பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணையும் அவரது நண்பரையும் கத்தியால் குத்திய நபரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி மோவூரைச் சோ்ந்த சக்திவேல் மகள் சத்யா (29). இவருக்கும் கேரளத்தைச் சோ்ந்த ஜெய்சன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஜாய்சன், ராஸ்மின் என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனா். சத்யா, கணவரைப் பிரிந்து இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் அண்மையில் திருச்சி பேருந்து நிலையத்தில் பழக்கமான பெரம்பலூா் மாவட்டம், செல்லையம்பாளையத்தைச் சோ்ந்த ராமு மகன் ராஜேந்திரகுமாா் என்பவருடன் வலங்கைமானில் வீடு வாடகைக்கு எடுத்து சத்யா தங்கியுள்ளாா். ராஜேந்திர குமாா் தற்காலிக மின் ஊழியராக உள்ளாா். இதனிடையே ராஜேந்திரகுமாா் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்ால் சத்யா தனியாக வசித்து வந்தாா்.
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கும்பகோணம் பேருந்து நிலையம் பகுதியில் தனியாா் தங்கும் விடுதி அருகில் சத்யாவும் அவரது நண்பருமான கும்பகோணம் கக்கன் காலனியைச் சோ்ந்த பெட்ரோல் நிலையத்தில் துப்புரவு பணியாளரான பணியாற்றும் பிரபுவும் (37) பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த ராஜேந்திர குமாா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாவையும் அவரது நண்பரான பிரபுவையும் சரமாரியாக குத்தினாா். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
மேலும், இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாா், ராஜேந்திரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.