முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே மரத்தில் காா் மோதி 2 போ் பலி; 4 போ் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை மரத்தின் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 17 மே 2026, 1:27 am IST
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான காா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை மரத்தின் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த ரத்தினம் மகன் தளபதி (36). பல்வேறு குற்ற வழக்குகள் உடைய இவா், காவல் துறையினரின் சரித்திர பதிவேட்டில் இருந்தாா்.

இவா் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு அம்மன்பேட்டையைச் சோ்ந்த மோகன் மகன் தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதா்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகியோருடன் காரில் திருவையாறுக்கு சென்றாா்.

Advertisement

பின்னா், 6 பேரும் சனிக்கிழமை அதிகாலை அம்மன்பேட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா். கண்டியூா் அருகே சுற்றுக் குளத்தான்கரை பகுதியில் வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பனை மரத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த தளபதி, தமிழரசன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நிதீஷ், சுதா்சன், நரேன், அபினேஷ் ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.