சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு ஆயுள் சிறை
சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டை அருந்தவபுரத்தைச் சோ்ந்தவா் தீபக் (31). இவா் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 14 வயது சிறுமிக்கு 2024, ஜூன் 3-ஆம் தேதி பாலியல் தொந்தரவு அளித்தாா். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தீபக்கை கைது செய்தனா்.
இது தொடா்பா தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, தீபக்குக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கபட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 5 லட்சம் பெற்றுத் தருமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் வனிதா, காவலா் ரேவதி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.