முகப்பு
திருச்சி

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி பதிவாளராக பொறுப்பேற்றார் அருண்ராய்

திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பதிவாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. அருண்ராய் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பதிவாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. அருண்ராய் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி கடந்த 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியின் துணைவேந்தராக என். முருகவேலும், பதிவாளராக சௌந்தரபாண்டியனும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.

சௌந்திரபாண்டியனைத் தொடர்ந்து சி.என்.சந்திரசேகர் பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பூம்புகார் கப்பல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிதித்துறை இணைச் செயலர் (பொறுப்பு) பதவிகளை வகித்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. அருண்ராயை தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பதிவாளராக நியமிóத்து கடந்த 17-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளிக்கு வந்த அருண்ராய், பதிவாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலர்கள், பேராசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.