திருச்சி

சிறுகனூர் அருகே விபத்து: எம்எல்ஏ உறவினர் சாவு

DIN

திருச்சி சிறுகனூர் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழியின் உறவினர் உயிரிழந்தார்.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராம் மகன் பாஸ்கர் (45). தி.மு.க. பிரமுகர். இவர் சட்டப்பேரவை உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழியின் உறவினர்.
மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.
அவரை வழியனுப்புவதற்காக பாஸ்கர், அவரது நண்பர்கள் காஜாமொய்தீன் (48), சுந்தரபாண்டியன் (25) ஆகியோருடன் காரில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்று மகேஷ் பொய்யாமொழியை வழியனுப்பிவிட்டு திருச்சிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை மணப்பாறையைச் சேர்ந்த பிரவீன்குமார் (29) ஓட்டினார்.
கார் சனிக்கிழமை அதிகாலை சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது, முன்னால் சென்ற ஒரு வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த பாஸ்கர் பலத்த காயங்களுடன் அந்த இடத்திலேயே இறந்தார்.
மேலும், காரில் வந்த காஜாமொய்தீன், சுந்தரபாண்டியன், ஓட்டுநர் பிரவீன்குமார் ஆகிய மூவரும் காயம் அடைந்தனர்.
சிறுகனூர் போலீஸார் விபத்து நேரிட்ட இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த பாஸ்கரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
விபத்து குறித்து சிறுகனூர் காவல் ஆய்வாளர் பாலச்சந்தர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT