திருச்சி

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீனவர்களை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மக்கள் அதிகாரம் சார்பில், திருச்சியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் திருச்சி ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். 
கடலில் தத்தளிக்கும் அனைத்து மீனவர்களை மீட்டு வர வேண்டும். மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கவேண்டும். கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர்தளம் அமைக்க வேண்டும். கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கென்று தனி அலைவரிசை ஏற்படுத்தி தொடர்பை ஒருங்கிணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT