திருச்சி

திருச்சி விமானநிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்

DIN

வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட  ஒரு கிலோ தங்க நகைகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு  திருச்சி வந்த ஏர்ஏசியா விமானத்தில் வந்த  பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், மதுரையைச் சேர்ந்த ஜெயபிரபா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகிய இருவரும் தலா ரூ. 13.20 லட்சம் மதிப்பிலான அரைகிலோ எடையுள்ள தங்க நகைகளையும், விருத்தாசலத்தைச் சேர்ந்த மகராஜ்பேகம் என்பவர் ரூ. 1.41 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்க நகைகளையும் தங்களது உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.  
இதனையடுத்து அவற்றை வெள்ளிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT