திருச்சி

ஸ்ரீரங்கம்  கோயிலில் இன்று தீர்த்தவாரி

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
இக்கோயிலில் ஐப்பசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் ஊஞ்சல் உற்ஸவம் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. தினமும் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சலில் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார்.  முக்கிய நிகழ்வான நெல்லளவு கண்டருளுதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணிக்கு கருவறையிலிருந்து புறப்படும் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். ஊஞ்சல் மண்டபத்தில் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை திருமஞ்சனமும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் உற்ஸவமும் கண்டருளிய பின்னர் இரவு 8.30 மணிக்கு கருவறையைச் சென்றடைவார்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜயராமன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT