கொடுமுடி-புகழூர் இடையே பராமரிப்பு பணி: ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்
கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இயங்கும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இயங்கும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது : கரூர் மாவட்டம் கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் 22 ஆம் தேதி வரையில் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் ( எண் 56712) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், (ஈரோடு -கரூர் இடையே மாற்றுப்பாதையில் ) கரூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்
பகுதியாக ரத்துசெய்யப்படும் ரயில்கள் : ஈரோடு -நெல்லை பயணிகள் ரயில் (எண்.56825), திருச்சி -ஈரோடு பயணிகள் ரயில்கள் (56841), நெல்லை-ஈரோடு பயணிகள் ரயில்கள் (எண் 56826) ஆகியவை ஈரோடு - கரூர் இடையிலும், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (எண் 56846) சேலம்-ஜோலார்பேட்டை இடையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் குறிப்பிட்ட இந்த நாள்களில் கரூர் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும்.