முகப்பு
திருச்சி

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தஞ்சையில் மணிமண்டபம் கட்ட கோரிக்கை

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று முத்தரையர் எழுச்சிச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 15 மே, 2018 at 4:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று முத்தரையர் எழுச்சிச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறியில் ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொன்.காமராஜர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முத்தரையர் உள்பிரிவு சாதிப் பெயர்களை இணைத்து திருத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சாதிப் பட்டியலை வெளியிட வேண்டும். முத்தரையர் சாதியின் 11 உள்பிரிவு சாதிகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பெரும்பிடுகு முத்தரையர் என்றழைக்கப்பட்ட சுவரன் மாறனை நினைவுக்கூரும் வகையில் அவருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கௌரவத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பா. மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக க.மஞ்சு வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ஆர். கமுகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.