திருச்சி

மின்சாரம் பாய்ந்து பெண் காயம்: மின்வாரியத்தை கண்டித்து பேருந்து சிறைபிடிப்பு, மறியல்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அறுந்து கிடந்த மின் கம்பிகளில் சிக்கிய பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மின்வாரியத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அடுத்த பனந்தோப்பைச் சேர்ந்தவர் ரெஜினாமேரி. செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டின் பின்பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபடிருந்த போது, அறுந்துகிடந்த மின் கம்பிகளில் சிக்கி காயமடைந்தார்.  இதையடுத்து அவரை அப்பகுதியிலுள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மின் கம்பிகள் அறுந்து கிடந்ததைக் கூட அறியாமல் மின் விநியோகம் செய்த மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அரசுப் பேருந்தையும், சிற்றுந்தையும் சிறைபிடித்து, சாலையில் மரங்களை போட்டு  மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மணப்பாறை போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,பேருந்துகளை விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT