திருச்சி

லால்குடியில் மர்மக் காய்ச்சலுக்கு பிளஸ் 2 மாணவி பலி

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி பரமசிவபுரம் பகுதியில் வசித்த பிளஸ் 2 மாணவி மர்ம காய்ச்சலால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
லால்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள பரமசிவபுரம் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகள் சௌமியா (17).  இப் பகுதியில் உள்ள எல்என்பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். 
கடந்த 3 நாட்களாக தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட இவரை வெள்ளிக்கிழமை இரவு லால்குடி அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்தபோது வழியிலேயே அவர் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். லால்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT