முகப்பு
திருச்சி

துறையூரில் ஆர்எஸ்எஸ் பேரணி

துறையூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:45 AM
பகிர்:

துறையூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் விஜயதசமி மற்றும் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நிகழ்த்திய சொற்பொழிவின் 125ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓங்காரக்குடிலில் தொடங்கிய பேரணி திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று பாலக்கரையில் நிறைவடைந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் சம்பத், வழக்குரைஞர் ரகுபதி, தமிழ்செல்வன், மாயாண்டி, கற்பக விநாயகம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தென்தமிழக பொறுப்பாளர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிக்கத்தம்பூர் பாளையம் சுவாமி ஸ்வரூபானந்தா, வழக்குரைஞர் பிரசன்னம், கால்நடை மருத்துவர் நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.