திருச்சி

ஆதிதிராவிடர் பொருளாதார மேம்பாட்டுக்கு கடனுதவி

DIN


தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நிலம் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 55 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டங்களுக்கு உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலும், இதர திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் கோரும் தொழிலுக்கான கல்வித் தகுதி, அனுபவச் சான்று, வாகனக் கடன் கோருவோர் எனில் ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் உடன் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாட்கோவில் இதுவரை மானியம் பெற்றிருத்தல் கூடாது.
உதவி தேவைப்படுவோர் தாட்கோ அலுவலகத்துக்கு நேரில்வந்து ரூ. 60 கட்டணம் செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2463969 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT