திருச்சி

குட்கா, பான்பராக் பொருள்கள் பறிமுதல்

DIN

திருச்சியில் சனிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50,000 மதிப்புள்ள குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மருத்துவர் ஆர்.சித்ரா தலைமையில் அலுவலர்கள் மேலரண் சாலை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர், அதிகாரிகளைக் கண்டதும் பையை விட்டுவிட்டு தப்பியோடினார். உடனடியாக அவரை அதிகாரிகள் பிடித்தனர்.
இதையடுத்து அந்த பையைச் சோதனையிட்ட போது அதில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து உறையூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவரையும், குட்கா உள்ளிட்ட பொருள்களையும் கோட்டை காவல் நிலையத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT