திருச்சி

அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

DIN


அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி காந்திமார்கெட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதியின்றி பண்டல், பண்டலாகப் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், காந்திமார்கெட் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், காந்திமார்கெட் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மினி லாரி, வீட்டினுள் பண்டல், பண்டலாகப் பட்டாசுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர். போலீஸார் வருவதையறிந்து வீட்டில் இருந்த அனைவரும் தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT