துறையூர் அருகே மணலோடை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற
முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ்.குமரகுரு தலைமை வகித்தார். துறையூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் டி. ராமசாமி, செயலர் கே.செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி பி. கார்த்திகேயன், துறையூர் சார்பு நீதிபதி ஜி.கரண், மாவட்ட உரிமையியல் நீதிபதி எ.மும்மூர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.