திருச்சி

கடவுச்சீட்டில் முறைகேடு: இருவர் கைது

DIN

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்த வடமாநிலத்தவர் இருவர் திருச்சி விமான நிலையத்தில், கைது செய்யப்பட்டனர்.
 கோலாலம்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் ஆவணங்களை  குடியேற்றப் பிரிவு போலீஸார் சோதனையிட்டனர். அப்போது,  பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சி. வக்ராசந்தீப் (45), மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எஸ். அலிஷேக் சம்ஜத் (32) ஆகிய இருவரின் கடவுச்சீட்டில் தில்லியிலிருந்து மலேசியா சென்று வந்ததாக போலி முத்திரையிடப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.  தொடர்ந்து வக்ராசந்தீப், அலிஷேக் சம்ஜத் ஆகிய இருவரும் மீது வழக்குப்பதிந்து கைது செய்த போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT