திருச்சி

காதல் விவகாரம்: இளைஞர் தற்கொலை

DIN

திருச்சி பொன்மலையில் காதல் விவகாரத்தில் இளைஞர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி விமான நிலையம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (26). இணையம் மூலம் உணவுப்பொருள்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் பொன்மலை அடிவாரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கடந்த2 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில்,  ராஜனுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், ஏற்கெனவே பழகிய பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த ராஜன், திங்கள்கிழமை பொன்மலை அடிவாரப் பகுதியிலுள்ள பெண் வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்மலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT