திருச்சி

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

DIN


 லால்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
லால்குடி அருகிலுள்ள மயிலரங்கம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலுசாமி. தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், தனது மனைவி பொன்மொழி, மகள் தீபிகா, மகன் சூர்யாவுடன் செவ்வாய்க்கிழமை சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்துக்கு  மோட்டார் சைக்கிளில் சென்றார். அம்மன் தரிசனத்துக்குப் பிறகு சிறுமருதூர் வழியாக ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பாலுசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனைவரும் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த சூர்யா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT