திருச்சி

ஏப்.25 முதல் மே 4 வரை சமஸ்கிருத பேச்சுப் பயிற்சி

DIN

சமஸ்கிருத பாரதி அமைப்பின் மூலம் திருச்சி மாநகரில் 19 இடங்களில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை சமஸ்கிருத பேச்சுப் பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்படவுள்ளது. 
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் டி.எஸ்.ரெங்கராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு சாரா தொண்டு நிறுவனமான சமஸ்கிருத பாரதி அமைப்பின் சார்பில் இலவச சமஸ்கிருத மொழி பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
திருச்சி மாநகரில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை 19 இடங்களில் சமஸ்கிருத இலவச பேச்சுப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. தினசரி 2 மணிநேரம் வீதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு முன்பே சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பயிற்சி முழுவதும் இலவசம். மேலும் விபரங்களுக்கு 94437 22042 அல்லது 89030 85099 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT