திருச்சி

பாரதிதாசன் பல்கலை. ஆய்வகத்தில் மாணவி தற்கொலை முயற்சி

DIN


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் மாணவி பாதரசத்தை குடித்து புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஆத்மநாதன் மகள் சிவனேஸ்வரி (25). இவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முதுகலை வாழ்வியல் அறிவியல் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார். 
இந்நிலையில், புதன்கிழமை காலை  11 மணியளவில், பல்கலைக்கழக ஆய்வகத்தில் சிவனேஸ்வரி பயிற்சி வகுப்பிலிருந்த போது, அங்கிருந்த பாதரசத்தை குடித்துள்ளார்.
இதைகண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரை அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT