திருச்சி

கடவுச்சீட்டில் போலி முத்திரை: 3 பேர் கைது

DIN


கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு மலேசியாவிலிருந்து திருச்சி வந்த  வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை இரவு வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பிகார் மாநிலம் பந்தாரியா பகுதியைச் சேர்ந்த அஸ்ரப்(35), குல்விந்தர்சிங்(30), மும்பைச் சேர்ந்த பினான்கோத்நாத்குப்தா(37) ஆகிய 3 பேரும் தங்களது கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு வந்தது தெரிய வந்தது. 
இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் விமானநிலைய போலீஸார் 3 பேரையும் கைது செய்து வியாழக்கிழமை சிறையிலடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT