திருச்சி

தனியார் பேருந்து - கார் மோதல்: இருவர் பலி

DIN


திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே தனியார் பேருந்தும், காரும் வியாழக்கிழமை இரவு மோதிக் கொண்டதில் சம்பவயிடத்திலயே இருவர் உயிரிழந்தனர்.
காட்டுப்புத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கஜேந்திரன் (31). இவரும், இவரது நண்பர் தவிட்டுப்பாளையம் சேர்ந்த முருகன் மகன் பாலன் (28) ஆகிய இருவரும் கஜேந்திரனுக்கு சொந்தமான காரில் மோகனூருக்கு சென்று விட்டு காட்டுப்புத்தூருக்கு உன்னியூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது, காரின் எதிரே காட்டுப்புத்தூரில் இருந்து வேலூருக்குச் சென்ற தனியார் பேருந்து மோதியதில், கஜேந்திரனும் பாலனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டுப்புத்தூர் போலீஸார்  சடலங்களை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT