திருச்சி

ரயிலில் அடிபட்டு பெண் பலி

DIN


பசு மாட்டை தேடிச் சென்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
திருச்சி முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த குமார் மனைவி சாந்தி(47). இவர், வெள்ளிக்கிழமை காலை பசு மாட்டை தேடி சென்றவர் வீட்டிற்கு வெகுநேரமாகியும் வரவில்லையாம். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி ரயில்வே போலீஸார் சாந்தியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT