திருச்சி

கட்செவி அஞ்சலில் அவதூறு: சிங்கப்பூரில் இருந்து வந்த புதுகை இளைஞர் கைது

DIN


  கட் செவி அஞ்சல் வாயிலாக ஒரு சமூகத்தினர் குறித்து அவதூறு பரப்ப உதவியதாக வெள்ளிக்கிழமை இரவு புதுகை இளைஞர் கைது செய்யப்பட்டார்.
          புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் கடந்த 17 ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.  இதன் தொடர்ச்சியாக பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதுதொடர்பாக, போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மஞ்சவயல் கரிசல்காட்டைச் சேர்ந்த செல்வகுமார் (34), வசந்த் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
        சிங்கப்பூரில், இந்த ஆடியோவை வெளியிட  உதவியாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் நெருச்சிப்பட்டியைச் சேர்ந்த சத்தியராஜ் (35) சனிக்கிழமை காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தபோது, அங்கு காத்திருந்த பொன்னமராவதி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT