திருச்சி

மூன்று இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு

DIN

திருச்சியில், உறையூர், கண்டோன்மென்ட் உள்ளிட்ட 3 இடங்களில் இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருச்சி நடுதையல்காரத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் ஆக. 21ஆம்தேதி தனது இரு சக்கர வாகனத்தை உறையூர் காசிசெட்டித் தெருவில் உள்ள பள்ளி முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பிறகு திரும்பி வந்து பார்த்த போது  தனது வாகனம் திருடு போனது தெரியவந்தது.
இதேபோல் உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது  வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமானது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் செல்வத்தின் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது தெரிய வந்தது. 
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் கடந்த 16 ஆம் தேதி  திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாதுகாப்புப்படை காவல்நிலையம் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தஞ்சாவூர் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது தனது வாகனம் திருடு போயிருந்தது.
இச்சம்பவங்கள் குறித்து  உறையூர், கண்டோன்மென்ட் போலீஸார்  மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT