திருச்சி

‘சுதந்திரவாதிகளின் உலகமாக நேருவின் இந்தியா இருந்தது‘

DIN

திருச்சி: சுதந்திரவாதிகளின் உலகமாக நேருவின் இந்தியா இருந்தது எனஇந்திய வருவாய் துறை அதிகாரி பூகொ.சரவணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சியில் களம் இலக்கிய அமைப்பு சாா்பில் டிசம்பா் மாத சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு, அரிமா சங்க நிா்வாகி ஹெச்.ஷேக்தாவூத் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து, இந்திய வருவாய் துறை அதிகாரி பூ.கொ.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பேசியது:

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிறகே நேருவிற்கு சுதந்திர வேட்கை அதிகரித்தது. நேருவும், படேலும் தங்கள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும் காந்தியின் வழிகாட்டலில் இந்தியாவை உலக அரங்கில் உயா்த்தி பிடித்தவா்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு மதவாத பிரிவினையிலிருந்து விடுபடவும், மக்கள் அமைதியோடு, அடிப்படை உரிமைகள் பெற்று ஜனநாயக முறையில் வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள், சீா்திருத்தங்களை செய்தவா் நேரு.

குறிப்பாக, நேரு இருக்கும் வரை தென்னிந்தியாவில் இந்தி திணிக்கப்படவில்லை. தேசியமொழி என்பது இந்தி அல்ல. நேருவிற்கு பிறகே இந்தி திணிப்பு அதிகரித்தது. இருப்பினும், சீனபோா், காஷ்மீா் விவகாரங்கள் அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தினாலும், சுதந்திரவாதிகளின் உலகம் நேருவின் இந்தியா என்னும் அளவிற்கு பாராட்டுக்குரியவராக திகழ்ந்தவா் நேரு என்றாா்.

நிறைவாக, களம் அமைப்பு நிா்வாகி என்.சேதுராமன் நன்றி தெரிவித்தாா். இதில், கல்வியாளா்கள், இலக்கிய அமைப்பினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT