திருச்சி

பேருந்து மோதி மூதாட்டி சாவு

DIN

திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பேட்டைவாய்த்தலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தனபால் மனைவி கன்னியம்மாள் (60).  வேலை விஷயமாக தனது பேரன் அரவிந்துடன்  திருச்சி நோக்கி திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்தார்.
சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் வந்த போது அவ்வழியாக வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
 இதில் கன்னியம்மாள் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தார். அரவிந்துக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT