திருச்சி

மாசி பௌர்ணமி : திருவானைக்காவில் நால்வர் புறப்பாடு

DIN

மாசி பௌர்ணமியையொட்டி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயிலில் நால்வர் புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதந்தோறும் பௌர்ணமியன்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் புறப்பாடாகி, 5 ஆம் பிரகாரத்தை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
நிகழ் மாதத்தில்  பௌர்ணமியோடு மாசி மகமும் இணைந்து வந்ததால், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கயிலாய வாத்தியத்துடன் 5 ஆம் பிரகாரத்தை வலம் வந்தனர். ஏராளமான சிவபக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று சிவமந்திரத்தை உச்சரித்து வலம் வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT