திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மையத்தில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மூலவர் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில், ரூ. 86, 800 மதிப்பிலான 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளில் அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பணிகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வே.பிரபாகர் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ்.வீரமணி ஆகியோர் செய்தனர்.