திருச்சி

மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 3.5 லட்சம் இந்திய பணம் பறிமுதல்

DIN

மலேசியாவுக்கு  கடத்த முயன்ற  ரூ.3.5 லட்சம் மதிப்பிலான இந்திய பணம் திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 
திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை காலை மலிண்டோ விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. முன்னதாக விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை திருச்சி விமானநிலைய சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 
அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த பெண் பயணி பஷிரா பேகம்(51) என்பவர் தனது உடைமையில் மறைத்து ரூ.3.5 லட்சம் இந்திய பணத்தை கடத்த முயன்றது தெரிய வந்தது.  மலேசியாவிற்கு கடத்த முயன்ற இந்தப் பணத்தை பறிமுதல் செய்த சுங்க துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT