திருச்சி

சுற்றுலா வழிகாட்டி வீட்டில் நகைகள் திருட்டு

DIN

திருச்சி  கே.கே.நகர் அருகிலுள்ள சுந்தர்நகர் ஏழாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (40). சுற்றுலா வழிகாட்டியான இவர், கடந்த 22 ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்னைக்குச் சென்றார்.
வியாழக்கிழமை இரவு முகமது இப்ராஹிம் வீட்டுக்குத் திரும்பி வந்த போது, பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். இதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2700 சௌதி ரியால் திருட்டுப் போயிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முகமது இப்ராஹிம் புகார் அளித்தார். இதன் பேரில்  போலீஸார் , மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களுடன் சென்று, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT