திருச்சி

மடிக்கணினி கோரி மாணவர்கள் முற்றுகை

DIN

12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தமிழக அரசின் இலவச மடிக்கணிணி கேட்டு செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு 12 ஆம்  வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணிணி வழங்கப்படவில்லை எனவும், தற்போது நிகழாண்டில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்கப்படவுள்ளதாம். தகவலறிந்த 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களுக்கும் இலவச மடிக்கணினி பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி முசிறி கோட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் தங்களது கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். விசாரணை மேற்கொண்ட  அவர் அளித்த உறுதியின்பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT