திருச்சி

"தோல்வி பயத்தில் தினகரன் பிதற்றுகிறார்'

DIN

தோல்விபயத்தில் தினகரன் பிதற்றுகிறார் என்றார் மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
மணப்பாறை ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியிலுள்ள கரும்புளிப்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிக்கு,  ரூ.46 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை  மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் நடராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தினந்தோறும் தோல்வியைச் சந்தித்து வரும் தினகரன், தோல்வி பயத்தில் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறார்.    யார் முதல் இடத்தை தக்க வைக்கப் போகிறார்கள் என்பதை விரைவில் அவர் புரிந்து கொள்வார் என்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டிணன்,  மாவட்டக் கல்வி அலுவலர் ராஜலிங்கம், பள்ளித் தலைமையாசிரியர் பக்கிரிசாமி, அதிமுக மாவட்டப் பொருளாளர் எம்.செல்வராஜ், ஒன்றிய செயலர் எம்.பி.,வெங்கடாசலம் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT