திருச்சி

முசிறியில் ஆர்ப்பாட்டம்

DIN

திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில துணைப் பொதுச் செயலர் பெ. மனோகரன் தலைமை வகித்தார்.
கட்சியின்  பொதுச் செயலரும் நிறுவனருமான ப. குணசேகரன் சிறப்புரையாற்றினார்.
முசிறி- துறையூர் சாலையில் உள்ள பூங்காவைச் சீரமைத்து பராமரிக்க வேண்டும். முசிறி அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு  கழிப்பிட வசதி, குடிநீர் வசதியுடன்  சத்துணவுக் கூடம், முசிறி பகுதியில் காவிரி  ஆற்று மணல்  கிடைக்க நடவடிக்கை வேண்டும், முசிறி தொட்டியம் பகுதியில் விவசாயத்தைக் காக்கும்  வகையில்  காவிரியில் நிரந்தர கொரம்பு மற்றும் தடுப்பணை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முசிறி ஒன்றிய செயலர் மு. பழனிவேல் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT