திருச்சி

தலைமையாசிரியர் அடித்ததால் மாணவி சுகவீனம்?

DIN

துறையூர் அரசு மருத்துவமனையில்  அரசுப் பள்ளி தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி மாணவி சிகிச்சை பெறுகிறார். 
துறையூர் அருகே கோட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் பலராம். வெள்ளிக்கிழமை இவர் வகுப்பில் பாடம் நடத்தியபோது அந்தப் பள்ளியில் படிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகள் சரண்யாவை (10) வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி கன்னத்திலும், முதுகிலும் அடித்தாராம்.
பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவி பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்த நிலையில்,  இரவில் காது வலிப்பதாகக் கூறியதால் சனிக்கிழமை அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான தகவலின்பேரில் துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT